தில்லி தொழிற்சாலையில் தீ விபத்து: ஒருவர் பலி
வடக்கு தில்லியின் பிரதாப் நகர் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.


வடக்கு தில்லியின் பிரதாப் நகர் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 3.47 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.
தீயணைப்பு நடவடிக்கையின் போது தீயணைப்பு வீரர்களில் ஒருவரின் விரலில் லேசான காயம் ஏற்பட்டது, ஆனால் அந்த இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
தொழிற்சாலையின் முதன் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்து இரண்டாவது தளத்திற்கும் பரவியது.
பின்னர், தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் மற்றும் நெயில் பாலிஷ் ஆகிய பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. முதல் தளத்தில் எரிந்த நிலையில் ஒருவரின் உடலை தில்லி தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாகத் தீயணைப்பு இயக்குநர் அதுல் கார்க் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...