சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

தில்லி தொழிற்சாலையில் தீ விபத்து: ஒருவர் பலி

வடக்கு தில்லியின் பிரதாப் நகர் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். 

News image
தில்லி தொழிற்சாலையில் தீ விபத்து: ஒருவர் பலி
Updated On :27 பிப்ரவரி 2021, 6:33 am

PTI

வடக்கு தில்லியின் பிரதாப் நகர் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். 

இன்று அதிகாலை 3.47 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. 

தீயணைப்பு நடவடிக்கையின் போது தீயணைப்பு வீரர்களில் ஒருவரின் விரலில் லேசான காயம் ஏற்பட்டது, ஆனால் அந்த இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

தொழிற்சாலையின் முதன் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்து இரண்டாவது தளத்திற்கும் பரவியது. 

பின்னர், தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் மற்றும் நெயில் பாலிஷ் ஆகிய பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. முதல் தளத்தில் எரிந்த நிலையில் ஒருவரின் உடலை தில்லி தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளதாகத் தெரிவித்தனர். 

தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாகத் தீயணைப்பு இயக்குநர் அதுல் கார்க் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.