தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உத்தரகண்ட் சுரங்கத்தில் அதிகரிக்கும் நீர்: மோட்டார் மூலம் வெளியேற்றம்

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்திலுள்ள தபோவான் சுரங்கத்தில் தண்ணீர் அதிகரித்துள்ளதால், அதனை மோட்டார் வைத்து வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

News image

உத்தரகண்ட் சுரங்கத்தில் அதிகரிக்கும் நீர்: மோட்டார் மூலம் வெளியேற்றம்

Updated On :27 பிப்ரவரி 2021, 7:34 am

DIN

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்திலுள்ள தபோவான் சுரங்கத்தில் தண்ணீர் அதிகரித்துள்ளதால், அதனை மோட்டார் வைத்து வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து, அங்குள்ள தௌலி கங்கா, ரிஷி கங்கா, அலக் நந்தா நதிகளில் கடந்த 7-ம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்த இரண்டு மின் நிலைய கட்டுமானப் பணிகளுக்காக தோண்டப்பட்டிருந்த சுரங்கங்களில் வெள்ள நீர் புகுந்தது. அதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

தபோவான் சுரங்கத்தில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அந்த சுரங்கத்தில் தண்ணீர் அதிகரித்து வருவதால், மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

சுரங்கத்தில் தண்ணீர் அளவு அதிகரித்து வருவதால், மோட்டார் வைத்து அதனை வெளியேற்றும் பணியில் மீட்புப் பணியினர் ஈடுபட்டுள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.