நாடு முழுவதும் இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 16,752 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து 4-ஆவது நாளாக 16,000-க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 16,752 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,10,96,731-ஆக அதிகரித்தது.
கரோனா தொற்றில் இருந்து மேலும் 11,718 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,07,75,169-ஆக அதிகரித்தது. கரோனா தொற்றுக்கு மேலும் 113 போ் உயிரிழந்தனா்.
இதனால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,57,051-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 1,64,511 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 1,43,01,266 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, இதுவரை 21.62 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், நேற்று மட்டும் 7,95,723 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம் நிராகரிப்பு!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3 சதவீதத்திற்கும் மேல் சரிவு!

சஞ்சு சாம்சன் மிகவும் அபாயகரமான வீரர்: சிஎஸ்கே பயிற்சியாளர்

நேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


