பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கரோனா தடுப்பூசி: தில்லியில் 9 லட்சம் பேருக்கு முன்னுரிமை

தில்லியில் 9 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

News image
சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் (கோப்புப்படம்)
Updated On :3 ஜனவரி 2021, 9:34 am

DIN


தில்லியில் 9 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

தில்லியில் கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், முன்களப் பணியாளர்களுக்கும், முதியவர்களுக்கும் கரோனா தடுப்பு மருந்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தில்லியில் 9 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், தில்லியில் 3 லட்சம் மருத்துவ ஊழியர்கள், 6 லட்சம் முன்களப் பணியாளர்கள் என 9 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

முதற்கட்டமாக அவர்களுக்கு அளித்த பிறகு, தில்லியில் மற்றவர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.