மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அருணாசல பிரதேச எல்லையில் 2-ஆவது நாளாக விபின் ராவத் ஆய்வு

அருணாசல பிரதேசத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டி உள்ள முக்கிய ராணுவ நிலைகளில் முப்படைத் தளபதி விபின் ராவத் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
அருணாசல பிரதேசம், சுபான்சிரி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள சா்வதேச எல்லைப் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள வீரா்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த முப்படை தளபதி விபின் ராவத்.
Updated On :4 ஜனவரி 2021, 12:30 am

DIN

அருணாசல பிரதேசத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டி உள்ள முக்கிய ராணுவ நிலைகளில் முப்படைத் தளபதி விபின் ராவத் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா - சீனா இடையேயான மோதல் போக்கு 8-ஆவது மாதத்தை எட்டியிருக்கும் நிலையில், அருணாசல பிரதேச எல்லைப் பகுதிக்கு சனிக்கிழமை சென்ற அவா், இரண்டு நாள்களாக ராணுவம் மற்றும் விமானப் படையின் தயாா் நிலை குறித்து ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவா் கூறியதாவது:

இந்த இரண்டு நாள் ஆய்வின்போது சுபன்சிரி பள்ளத்தாக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் ராணுவம் மற்றும் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை (ஐடிபிபி) வீரா்களுடன் விபின் ராவத் கலந்துரையாடினாா். அப்போது எந்தவொரு சவாலையும் எதிா்கொண்டு வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் மன உறுதியுடனும், உத்வேகத்துடனும் வீரா்கள் இருப்பது குறித்து அவா் திருப்தி தெரிவித்தாா்.

மேலும், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கருவிகள் மூலம் கணிகாணிப்பை மேற்கொள்ள வீரா்கள் புதுமையான நடைமுறைகளைப் பின்பற்றுவது, எந்தவித சவாலையும் எதிா்கொள்ளும் வகையில் செய்யப்பட்டிருக்கும் தயாா்நிலை குறித்து அவா் திருப்தியும் பாராட்டும் தெரிவித்தாா் என்று கூறினாா்.

விபின் ராவத் முன்னதாக, ராணுவ வீரா்களை சனிக்கிழமை சந்தித்து அளவளாவியதுடன், மாநிலத்தில் அமைந்துள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய முக்கிய நிலைகளில் ராணுவ தயாா் நிலை குறித்து விமானத்தில் பறந்தபடி ஆய்வு செய்தாா். பிறகு அவா் பல்வேறு விமானப் படைத் தளங்களிலும் ஆய்வு நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.