ஒடிசா மாநிலம், ரூர்கேலா இரும்பு ஆலையில் நச்சு வாயு கசிவு ஏற்பட்டதன் காரணமாக நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
ஒப்பந்த தொழிலாளர்கள் நான்கு பேர் வழக்கம்போல் இன்று காலை நிலக்கரி இரசாயனத் ஆலையில் ஸ்டார் கன்ஸ்ட்ரக்ஷன் பணியில் ஈடுபடு வந்தனர். தொழிலாளர்கள் 10 பேர் பணியிலிருந்தபோது திடீரென நச்சு வாயு கசிந்துள்ளது.
இதைச் சுவாசித்த 4 தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, இஸ்பத் பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் நால்வரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் சிலர் முச்சுத்தினறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்தவர்கள் கணேஷ் சந்திர பைலா (55), ரவீந்திர சாஹு (59), அபிமன்யு ஷா (33), பிரம்ஹானந்த பாண்டா (51) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க உயர் மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை சாதாரணமாக செயல்பட்டு வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி.: நெடுஞ்சாலையில் சிதறிக் கிடந்த ரூ.4 லட்ச பணம் உரிமையாளரிடம் ஒப்படைப்பு

சர்தார் - 2 என்ன ஆனது?
வேட்டுவம் வெளியீடு எப்போது?
பெட்ரோல் விலை கடுமையாக உயரும்: ராகுல் காந்தி
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


