பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: 4-வது நாளாக விமான சேவை ரத்து

ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக 4-வது நாளாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

News image
ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: 4-வது நாளாக விமான சேவை ரத்து
Updated On :6 ஜனவரி 2021, 5:52 am

DIN

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக 4-வது நாளாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாள்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் கடந்த 3 நாள்களாக விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் பனிப்பொழிவால்  விமான ஓடுதளத்தில் பனி படர்ந்துள்ளதால், விமானங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பனிப்புகையாலும், ஓடுதளத்தில் படர்ந்துள்ள பனியாலும், விமானங்களை இயக்க முடியவில்லை என்றும், பனிகளை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓடுதளம் முழுமையாக தயாரான பிறகும், வானிலை முன்னேற்றமடைந்த பிறகும் விமானங்களை இயக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.