மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

உ.பி.: ஜன. 28-இல் 12 சட்ட மேலவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல்

உத்தரப் பிரதேசத்தில் இந்த மாத இறுதியில் காலியாகவுள்ள 12 சட்ட மேலவை உறுப்பினர் பதவிக்கு வரும் 28-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று (புதன்கிழமை) அறிவித்தது.

News image
தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா (கோப்புப்படம்)
Updated On :6 ஜனவரி 2021, 12:09 pm

DIN


உத்தரப் பிரதேசத்தில் இந்த மாத இறுதியில் காலியாகவுள்ள 12 சட்ட மேலவை உறுப்பினர் பதவிக்கு வரும் 28-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று (புதன்கிழமை) அறிவித்தது.

இதுதவிர பிகாரில் பாஜக தலைவர் சுஷில் மோடி மாநிலங்களவைக்குத் தேர்வானார், வினோத் நரைன் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். இதனால், அவர்கள் பொறுப்பு வகித்த மேலவை உறுப்பினர் பதவிக்கும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. ஆந்திரத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் சட்ட மேலவை உறுப்பினர் போதுல சுனிதா ராஜிநாமா செய்தார். இதனால், அந்தப் பொறுப்புக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

இவை அனைத்திற்கும் ஜனவரி 28-இல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடைபெற்று ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.