பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பிரதமர் மோடி,ஜெர்மனி பிரதமர் ஆலோசனை

இந்திய பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் இடையே கரோனா தொற்று உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து காணொலி வழியாக புதன்கிழமை ஆலோசனை நடைபெற்றது. 

News image
Updated On :6 ஜனவரி 2021, 11:05 pm

DIN


புது தில்லி: இந்திய பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் இடையே கரோனா தொற்று உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து காணொலி வழியாக புதன்கிழமை ஆலோசனை நடைபெற்றது. 

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் இடையே கரோனா தொற்றை எதிர்கொள்ளுதல், இருநாட்டு உறவுகள், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள், குறிப்பாக இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான உறவு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற்றது. 

இந்தியாவில் கரோனா தடுப்பூசி தயாரிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமரிடம் விவரித்தார் என்று தெரிவிக்கப்பட்டது. 
இதுகுறித்து பிரதமர் மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "இந்த ஆண்டு இந்தியா-ஜெர்மனி இடையே தூதரக உறவு ஏற்பட்டதன் 70-ஆம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இவ்வேளையில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுடன் ஆக்கபூர்வமான முறையில் ஆலோசனை நடைபெற்றது' என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.