தெலங்கானாவில் புதிதாக 379 பேர் பாதிப்பு: 305 பேர் குணம்

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 379 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
Telangana's COVID-19 tally surges beyond 2.88 lakh with 417 new additions
Telangana's COVID-19 tally surges beyond 2.88 lakh with 417 new additions
Updated on
1 min read

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 379 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில், கடந்த 24 மணி நேர அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது, 

தெலங்கானாவில் இன்றைய நிலவரப்படி மேலும் 379 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரேநாளில் 305 பேர் நோய்த் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்பு 2,88,789 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், நோய் தொற்றுக்கு புதிதாக மூவர் பலியாகியுள்ளதால், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,559 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதித்த 5,053 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து நேற்று 41,246 சோதனைகள் மேற்கொண்டுனர். 

இதையடுத்து குணமடைந்தோரின் விகிதம் 97.71 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com