பிரிட்டனிலிருந்து 250 பேருடன் தில்லி வந்தது ஏர் இந்தியா விமானம்

பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் தொடங்கியது.
பிரிட்டனிலிருந்து 250 பேருடன் தில்லி வந்தது ஏர் இந்தியா விமானம்
பிரிட்டனிலிருந்து 250 பேருடன் தில்லி வந்தது ஏர் இந்தியா விமானம்
Updated on
1 min read


புது தில்லி: பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் தொடங்கியது.

இதையடுத்து பிரிட்டனிலிருந்து 250 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் தில்லி வந்தடைந்தது.

ஏர் இந்தியா விமானம் இன்று பிரிட்டனிலிருந்து தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்திறங்கியது. இந்த விமானங்கள் அனைத்தும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் தீவிர கண்காணிப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. அதிலிருந்து 250 பயணிகள் தில்லி வந்துள்ளனர்.

அனைவருக்கும் ஆர்டி-பிசிஆர் சோதனை நடத்தப்பட்டு தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com