புது தில்லி: புது தில்லியில், 10 வயது சிறுவனை கடத்தி, அவரது பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டி, மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சத்தில் சிறுவனைக் கொன்ற இரண்டு சிறார்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புது தில்லியின் கஜுரி காஸ் பகுதியில் உள்ள ஒரு மசூதியின் இரண்டாவது தளத்தில் கட்டுமானப் பொருள்கள் போட்டு வைத்திருந்த இடத்திலிருந்து 10 வயது சிறுவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை சிறுவன் காணாமல் போன நிலையில், சிறுவனை உறவினர்களும், காவலர்களும் தேடியபோது, மசூதியின் இரண்டாவது தளத்தில் அவனது உடல் நேற்று இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மசூதிக்கு வியாழக்கிழமை சென்ற சிறுவன், திரும்பி வராததால், அங்கேதான் அவன் காணாமல் போயிருப்பான் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மசூதிக்குள் தேடுதல் பணி நடைபெற்ற போது, சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிறுவனைக் கடத்தி வந்து, மசூதிக்குள் ஒளித்து வைத்துக் கொண்டு, பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்ட நினைத்த சிறார்கள், தேடுதல் வேட்டை தீவிரமானதால், சிறுவனை கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளனர்.
அங்குப் பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சிறார்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவின் கண்ணியத்தில் சமரசம் கூடாது!

கை கழுவலாகாது!

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!

இன்றைய ராசி பலன்கள் (28 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! தனுசு ராசிக்கு லாபம்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


