புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஸ்ரீநகரில் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் தொடரும் பனிப்பொழிவால் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

News image
ஸ்ரீநகரில் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Updated On :9 ஜனவரி 2021, 2:53 pm

DIN

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் தொடரும் பனிப்பொழிவால் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

கடும் பனிப்பொழிவைத் தொடர்ந்து ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் இயக்க முடியாததால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. 

"பனிப்பொழிவு மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்துள்ளது. பனிப்பொழிவால் வாகனங்கள் சாலையில் பயணிக்க முடியவில்லை” என உள்ளூர் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

பனியால் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகத் தங்குமிடங்களை சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் பனிப்பொழிவு மற்றும் மழையை கருத்தில் கொண்டு தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, கடுமையான பனிப்பொழிவு காரணமாக சில நாட்களுக்கு விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.