முன்னுரிமை அடிப்படையில் இந்தியா 20 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகளை பிரேசிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள அவர், இந்தியாவில் புணேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசிகளை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்துவிட்டு, முன்னுரிமை அடிப்படையில் இந்தியா பிரேசிலுக்கு 20 லட்சம் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசி மருந்துகளை விரைந்து அனுப்பி வைக்க வேண்டும் என்று பொல்சனாரோ கோரிக்கை விடுத்துள்ளார்.