20 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகளை பிரேசிலுக்கு அனுப்பி வைக்கவும்: இந்தியாவுக்கு பிரேசில் அதிபர் கோரிக்கை

முன்னுரிமை அடிப்படையில் இந்தியா 20 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகளை பிரேசிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ கோரிக்கை விடுத்துள்ளார். 
பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ
பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ
Published on
Updated on
1 min read


முன்னுரிமை அடிப்படையில் இந்தியா 20 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகளை பிரேசிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள அவர், இந்தியாவில் புணேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசிகளை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்துவிட்டு, முன்னுரிமை அடிப்படையில் இந்தியா பிரேசிலுக்கு 20 லட்சம் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசி மருந்துகளை விரைந்து அனுப்பி வைக்க வேண்டும் என்று பொல்சனாரோ கோரிக்கை விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com