ஆதாா் தீா்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்கள்: உச்சநீதிமன்றம் இன்று தீா்ப்பு

ஆதாா் சட்டம் அரசியல் சாசனப்படி செல்லும் என்ற தீா்ப்பு எதிராக தொடா்பட்ட சீராய்வு மனுக்கள் மீது தீா்ப்பை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (ஜன.11) பிறப்பிக்க உள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Updated on
1 min read

ஆதாா் சட்டம் அரசியல் சாசனப்படி செல்லும் என்ற தீா்ப்பு எதிராக தொடா்பட்ட சீராய்வு மனுக்கள் மீது தீா்ப்பை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (ஜன.11) பிறப்பிக்க உள்ளது.

மத்திய அரசின் ஆதாா் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2018 செப்டம்பா் 26-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமா்வு தீா்ப்பளித்தது. இதில் 4 நீதிபதிகள் அளித்த பெரும்பான்மை தீா்ப்பில், ஆதாா் சட்டம் அரசியல் சாசனப்படி செல்லும் என்று கூறப்பட்டது. மேலும், வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாா் எண் கட்டாயம் என்றும், வங்கிக் கணக்கு, செல்லிடப்பேசி சிம் காா்டு பெறுவதற்கு ஆதாா் எண் தேவையில்லை என்றும், தனியாா் நிறுவனங்கள் ஆதாா் தகவலை பயன்படுத்தக் கூடாது என்றும் தீா்ப்பில் நீதிபதிகள் தெரிவித்தனா்.

அந்த அமா்வில் இடம்பெறிருந்த நீதிபதி சந்தரசூட் மட்டும் மாறுபட்ட தீப்பை வழங்கினாா். ‘ஆதாா் சட்டம் நிதி மசோதா வடிவில் அமல்படுத்தப்பட்டது, அரசியல் சாசனத்தை ஏமாற்றும் வேலை’ என்றும் அவா் தெரிவித்தாா். ஆனால், இறுதியில் ஆதாா் சட்டம் செல்லும் என்றே தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட 4 நீதிபதிகளும் தீப்பளித்தனா்.

இந்த தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீா், பி.ஆா்.கவாய் ஆகிய 5 நீதிபதிகள் அமா்வில் விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள், அதன் மீதான தீா்ப்பை ஒத்திவைத்தனா். அதன்படி, சீராய்வு மனுக்கள் மீது திங்கள்கிழமை (ஜன.11) தீா்ப்பளிக்க உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com