ஒடிசாவில் அங்குல் மாவட்டத்தில் 25 வயது இளைஞர் அவரது உறவினர்களால் எரிக்கப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர்.
இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை ஹண்டபா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கடலிமுண்டா கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் ராஜ் கிஷோர் பிரதான் என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர் அடிக்கடி மது அருந்தியதாகவும், குடிபோதையில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும், மோசமாக நடந்துகொள்வதை விரும்பாத உறவினர்கள் இளைஞரை மரத்தில் கட்டி பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
கிஷோர் பிரதானின் உடலை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் தொடர்ந்து விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்டத்தில் 21,761 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன: ஆட்சியா்

தொழிற்பணிகளுக்கு வன நிலம்: வழிகாட்டுதல்களைப் பின்பற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
தூத்துக்குடி-சென்னை விமானக் கட்டணம் ரூ.17 ஆயிரமாக உயா்வு

சிக்கிமில் பிரதமா் மோடி பிரம்மாண்ட சாலைப் பேரணி
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


