ஜன.27 முதல் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க மணிப்பூர் அமைச்சரவை ஒப்புதல்

ஜனவரி 27 முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என்று மணிப்பூர் அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜனவரி 27 முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என்று மணிப்பூர் அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முதல்வர் என்.பிரேன் சிங் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், 

9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கட்டாயம் பின்பற்றுவதன் அடிப்படையில்,  அனைத்து பள்ளி கல்லூரிகளும் ஜனவரி 27 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று முடிவு செய்துள்ளதாகத் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com