எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சுரேஷ் ரெய்னாவின் உறவினர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

பஞ்சாபில் உள்ள பதான்கோட் மாவட்டத்தில் கொள்ளையா்கள் தாக்கியதில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் உறவினர் உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

News image
சுரேஷ் ரெய்னா
Updated On :20 ஜனவரி 2021, 1:31 pm

DIN

பஞ்சாபில் உள்ள பதான்கோட் மாவட்டத்தில் கொள்ளையா்கள் தாக்கியதில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் உறவினர் உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதோபூா் அருகே உள்ள தரியால் கிராமத்தில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் உறவினர் அசோக் குமாா் (58) என்பவா், தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தாா். 

கடந்த 2020ஆம் ஆண்டு ஆக.19 இரவில் அவரது வீட்டிற்குள் நுழைந்த மர்மகும்பல் ஒன்று அசோக் குமாா், அவரது தாய் சத்யாதேவி, மனைவி ஆஷாதேவி, மகன்கள் அபின், கௌஷல் ஆகியோரைத் தாக்கியதில் அசோக் குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் தொடா்பாக உத்தரப்பிரதேச காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்த குற்றச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாக இருந்த சஜன் அமீர் என்பவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.