தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

முடிவடையாத போராட்டம்: தில்லி எல்லையில் விவசாயி தற்கொலை

தில்லி டிக்ரி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயி ஒருவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
முடிவடையாத போராட்டம்: தில்லி எல்லையில் விவசாயி தற்கொலை (கோப்புப்படம்)
Updated On :20 ஜனவரி 2021, 10:33 am

DIN

தில்லி டிக்ரி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயி ஒருவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்துகொண்ட விவசாயி ஹரியாணா மாநிலம் ரோடக் கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி நகரின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் எந்தவித சமரசமும் ஏற்படாததால், 10 வது கட்டமாக இன்று (ஜன. 20) பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தில்லியின் டிக்ரி எல்லையில் போரட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜெய் பகவான் ராணா (42) என்ற விவசாயி சல்பாஸ் மாத்திரிகளை அதிக அளவு உண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியில் அவர் உயிரிழந்தார்.

தற்கொலைக்கு முன்பு கடிதம் ஒன்றையும் அவர் எழுதிவைத்துள்ளார். அதில், நான் ஒரு ஏழை விவசாயி. ஏராளமான விவசாயிகள் சாலைகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

வேளாண் சட்டங்கள் இரண்டு அல்லது மூன்று மாநிலங்களின் பிரச்சனை என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது ஒரு இயக்கமாக மாறவில்லை என்பது தான் சோகம். எனினும் தொடர்ந்து நாங்கள் போராடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.