பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ஜனவரி 30-ஆம் தேதி மீண்டும் தமிழகம் வருகை புரியவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளின் அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்துகொள்ளும் கூட்டத்தில் பங்கேற்கவும் ஜெ.பி.நட்டா திட்டமிட்டுள்ளார்.
கடந்த 14-ஆம் தேதி தமிழகம் வந்த ஜெ.பி.நட்டா சென்னையை அடுத்த மதுரவாயலில் நடைபெற்ற பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழாவில் கலந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜெ.பி.நட்டா தற்போது தமிழகம் வருகை புரியவுள்ளார். தமிழகத்தில் அவர் மதுரைக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வருகிற 28-ஆம் தேதி ஜெ.பி.நட்டா புதுச்சேரி வரவிருப்பதாகவும் புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.