தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தில்லியில் ஒரு கோடிக்கும் அதிகமான கரோனா பரிசோதனைகள்: கேஜரிவால்

தில்லியில் ஒரு கோடிக்கும் அதிகமான கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

News image
முதல்வர் அரவிந்த் கேஜரிவால் (கோப்புப்படம்)
Updated On :21 ஜனவரி 2021, 9:53 am

DIN


தில்லியில் ஒரு கோடிக்கும் அதிகமான கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ஒரு கோடிக்கும் அதிகமான கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இது தில்லியின் 50 சதவிகித மக்கள் தொகைக்கு சமமாகும். 

பரிசோதனைகளை அதிகரித்து சிகிச்சை அளிக்கும் முறையை துரிதப்படுத்தியதால் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

தில்லியில் நேற்றைய (ஜன.20) நிலவரப்படி 228 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,33,049-ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக 6,20,128 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று மட்டும் 63,161 பேருக்கு கரோனா பரிசோதனை செய்த நிலையில், இதுவரை மொத்தமாக 1,00,59,193 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.