தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திரிபுரா: அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள்

திரிபுராவில் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்கும் மசோதாவிற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

News image

திரிபுரா: அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் (கோப்புப்படம்)

Updated On :21 ஜனவரி 2021, 8:29 am

DIN


திரிபுராவில் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்கும் மசோதாவிற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் மாநிலத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு இலவசமாக நாப்கின்கள் வழங்கப்படவுள்ளது.

இது குறித்து பேசிய கல்வித்துறை அமைச்சர் ரத்தன் லால் நாத், பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்கும் கிஷோரி சுஜிதா அபியா என்ற திட்டத்தின் கீழ் 1.68 லட்சம் மாணவிகள் பயனடைவார்கள்.

இந்த திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மாநில அரசு சார்பில் 3.6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராமங்களில் பின் தங்கிய மாணவிகளின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தபட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.