அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஒடிசாவில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இருவர் மருத்துவமனையில் அனுமதி

ஒடிசா மாநிலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டு முன்களப் பணியாளர்கள் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News image
ஒடிசாவில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இருவர் மருத்துவமனையில் அனுமதி
Updated On :22 ஜனவரி 2021, 5:27 am

PTI


புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டு முன்களப் பணியாளர்கள் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜகத்சிங்பூர் மற்றும் பர்கர் மாவட்டங்களைச் சேர்ந்த அந்த இரு முன்களப் பணியாளர்களின் உடல்நிலையும் சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதாகும் ஆஷா பணியாளர் கடந்த 19-ஆம் தேதி தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், அவருக்கு கடும் தலைவலி மற்றும் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பர்கார் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது செவிலியர் ஒருவர் 16-ஆம் தேதி தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், அன்று முதல் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். 

இவர்கள் இருவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.