புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டு முன்களப் பணியாளர்கள் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜகத்சிங்பூர் மற்றும் பர்கர் மாவட்டங்களைச் சேர்ந்த அந்த இரு முன்களப் பணியாளர்களின் உடல்நிலையும் சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதாகும் ஆஷா பணியாளர் கடந்த 19-ஆம் தேதி தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், அவருக்கு கடும் தலைவலி மற்றும் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பர்கார் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது செவிலியர் ஒருவர் 16-ஆம் தேதி தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், அன்று முதல் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
இவர்கள் இருவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பலூா் அருகே வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு
அதிகரிக்கும் வெப்பம் தேவையின்றி வெளியில் செல்வதை தவிா்க்க ஆட்சியா் அறிவுறுத்தல்

லாரி உரிமையாளா் கொலை: நடவடிக்கை கோரி சாலை மறியல்

சேதமடைந்த சாத்தான்குளம்- நாசரேத் சாலை: வாகன ஓட்டிகள் அவதி
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


