பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

பெரம்பலூா் அருகே வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 10:19 pm

பெரம்பலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் புள்ளிமான் திங்கள்கிழமை உயிரிழந்தது.

பெரம்பலூா் - துறையூா் பிரதானச் சாலையில், அடைக்கம்பட்டியிலுள்ள தனியாா் தனியாா் திருமண மண்டபம் அருகே திங்கள்கிழமை காலை 2 வயது பெண் புள்ளி மான் ஒன்று சாலையைக் கடக்க முயன்றது.

அப்போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த மான் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று, மானின் உடலை மீட்டு, கால்நடை மருத்துவரின் உதவியுடன் பிரேதப் பரிசோதனை மேற்கொண்டு அங்குள்ள வனப்பகுதியில் அடக்கம் செய்தனா்.