மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கோழி இறக்குமதிக்கு ஜம்மு-காஷ்மீரில் விதித்திருந்த தடை நீங்கியது

பறவைக் காய்ச்சல் அச்சத்தால் கோழி இறக்குமதிக்கு ஜம்மு-காஷ்மீர் அரசு விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. 

News image
பறவை காய்ச்சல்
Updated On :22 ஜனவரி 2021, 6:43 am

IANS

பறவைக் காய்ச்சல் அச்சத்தால் கோழி இறக்குமதிக்கு ஜம்மு-காஷ்மீர் அரசு விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. 

கரோனாவுக்கு அடுத்தபடியாக பல மாநிலங்களிலும் சமீபமாகப் பறவைக் காய்ச்சல் நோய் வேகமாகப் பரவி வருகின்றது. இதையடுத்து பல்வேறு கோழிப் பண்ணைகளில் உள்ள பறவைகள் அழிக்கப்பட்டது. 

இதன் காரணமாக , ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கோழி இறக்குமதிக்கு அந்நாட்டு அரசு திடீரென தடை விதித்திருந்தது. தற்போது அந்த தடையை நீக்கியுள்ளது. 

இதுதொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவில், 

பறவைக் காய்ச்சல் பாதிக்கப்படாத பகுதியிலிருந்து கொண்டுவரும் கோழி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிக்குத் தடை விதிக்கப்படாது. ஆனால் இறக்குமதி செய்யப்பட்ட கோழிப்பண்ணையிலிருந்து பறவைக் காய்ச்சல் இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் வைத்திருப்பது அவசியம் என்றார். 

ஜம்மு-காஷ்மீரில் பறவைக் காய்ச்சல் இருப்பதாக இதுவரை எந்த அறிக்கையும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.