டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ராமர் கோயில் கட்ட ரூ.30 லட்சம் நன்கொடை அறிவித்தார் பவன் கல்யாண்

உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோயில் கட்ட ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் ரூ.30 லட்சம் நன்கொடை வழங்குவதாக அறிவித்தார்.

News image
ராமர் கோவில் கட்ட ரூ.30 லட்சம் நன்கொடை அறிவித்தார் பவண் கல்யாண்
Updated On :27 ஜனவரி 2024, 7:21 pm

DIN

உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோயில் கட்ட ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் ரூ.30 லட்சம் நன்கொடை வழங்குவதாக அறிவித்தார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கோயில் கட்டுவதற்காக நாடு முழுவதும் நன்கொடை வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராமர் கோயில் கட்டுவதற்காக ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் நன்கொடை வழங்குவதாக அறிவித்தார்.

வெள்ளிக்கிழமை திருமலை வெங்கடேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் ராமர் கோயில் கட்டுவதற்காக ரூ.30 லட்சம் நன்கொடை வழங்குவதாக அறிவித்தார்.

அப்போது கோயில்கள் சேதப்படுத்தப்படுவதில் ஜெகன்மோகன் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என பவண் கல்யாண் குற்றம்சாட்டினார்.

முன்னதாக, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கெளதம் கம்பீர்  ஆகியோர் நன்கொடை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.