6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாட்டின் பொருளாதாரத்தை மத்திய அரசு அழித்து வருகிறது: ராகுல் காந்தி

நாட்டின் பொருளாதாரத்தை மத்திய அரசு அழித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி  குற்றஞ்சாட்டியுள்ளார். 

News image
ராகுல் காந்தி
Updated On :28 ஜனவரி 2021, 7:09 am

DIN

நாட்டின் பொருளாதாரத்தை மத்திய அரசு அழித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி  குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நாட்டின் பொருளாதாரத்தை அழித்து வருகிறது. உலகின் வேகமாக வளர்ந்து வரும் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு அழிப்பது என்பதற்கு சான்றாக பிரதமர் மோடியின் ஆட்சி உள்ளது என்று பதிவிட்டுள்ளார். 

கரோனா பொதுமுடக்கத்தின்போது, இந்திய பணக்காரர்களின் வருமானம் 35% அதிகரித்துள்ளதாக ஆக்ஸ்பாம் வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார். 

நாட்டில் பொருளாதாரம், வேலைவாய்ப்பு பிரச்னை மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ராகுல் காந்தி மத்திய அரசை தீவிரமாக விமர்சித்து வருகிறார். ஒரு நாட்டில் 3-4 முதலாளிகளுக்காக அரசை நடத்துவது பிரதமர் மோடியாகத் தான் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.