ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஜம்மு-காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் காவல்துறையினருடன் இணைந்து பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினா். இந்த சண்டையில் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
தொடர்ந்து, அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.