கர்நாடகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 4 மருத்துவர்களுக்கு கரோனா பாதிப்பு

கர்நாடகத்தில் கரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக் கொண்ட 4 மருத்துவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 4 மருத்துவர்களுக்கு கரோனா பாதிப்பு
கர்நாடகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 4 மருத்துவர்களுக்கு கரோனா பாதிப்பு
Updated on
1 min read


கர்நாடகத்தில் கரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக் கொண்ட 4 மருத்துவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில், இரண்டு மருத்துவர்கள் ஒரு வாரத்துக்கு முன்பு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். இவர்கள் நான்கு பேர் மட்டுமல்லாமல், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கரோனா மருத்துவமனையில் பணியாற்றும் மேலும் 3 மருத்துவர்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவருக்கும் லேசான அறிகுறிகளே தென்படுவதாகவும், வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சாம்ராஜ்நகர் சுகாதாரத் துறை அதிகாரி கூறுகையில், கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் மட்டுமே, கரோனா வைரஸிலிருந்து காக்க உதவாது, இரண்டாவது டோஸ் மருந்தும் செலுத்திக் கொண்டால்தான், கரோனா தொற்றிலிருந்து காக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது ஏன் என்று கேட்டதற்கு, இவர்களுக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டதால் பரிசோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com