கேரளத்திலிருந்து வருபவர்களுக்கு கரோனா சான்றிதழ் கட்டாயம்: கர்நாடக அரசு

கேரள மாநிலத்திலிருந்து கர்நாடகத்திற்கு வருபவர்கள் கரோனா பரிசோதனை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
கேரளத்திலிருந்து வருபவர்களுக்கு கரோனா சான்றிதழ் கட்டாயம்: கர்நாடக அரசு
Updated on
1 min read

கேரள மாநிலத்திலிருந்து கர்நாடகத்திற்கு வருபவர்கள் கரோனா பரிசோதனை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை குறைந்துள்ள நிலையில், கேரளம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கடந்த சில நாள்களாக மீண்டும் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், கேரள எல்லையான தலபாடி சோதனைச் சாவடி வழியாக கர்நாடக மாநிலத்திற்கு வரும் அனைவரும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பரிசோதனை இல்லாமல் வருபவர்களுக்கு எல்லைகளில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது. 

பரிசோதனை முடிவில், கரோனா தொற்று இல்லை என்றால் மட்டுமே கர்நாடக மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com