கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி

கர்ப்பிணி பெண்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.
கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி
கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி
Updated on
1 min read

கர்ப்பிணி பெண்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்,

கரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதிக்கப்படுகிறது. கோவின் தளத்தில் பதிவு செய்த பின்னர் அல்லது அருகிலுள்ள தடுப்பூசி முகாம்களுக்கு நேரில் சென்று பதிவு செய்த பின்னர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான நெறிமுறைகள் மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசியால் கர்ப்பிணி பெண்களுக்கு சோர்வு அல்லது பக்கவிளைவுகள் ஏற்படாது என எய்ம்ஸ் மருத்துவர்கள், மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக தெரிவித்து வந்த நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com