தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா சிறையிலிருந்து விடுதலை

ஆசிரியர் நியமன மோசடி வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா இன்று திகார் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

News image

ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா சிறையிலிருந்து விடுதலை

Updated On :2 ஜூலை 2021, 8:01 am

DIN


புது தில்லி: ஆசிரியர் நியமன மோசடி வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா இன்று திகார் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

86 வயதாகும் சௌதாலா, ஏற்கனவே பரோலில் இருக்கும் நிலையில் இன்று திகார் சிறைச்சாலைக்குச் சென்று, சிறையிலிருந்து விடுதலையாவதற்கான பணிகளை முடித்துக் கொண்டு முறைப்படி சிறையிலிருந்து விடுதலையானார்.

கரோனா பேரிடரைக் கருத்தில் கொண்டு, கடந்த மாதம் தில்லி அரசு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று 9 ஆண்டு, 6 மாதம் சிறையில் கழித்த சிறைக் கைதிகளுக்கு 6 மாத சிறைத் தண்டனையை குறைத்தது. இதையடுத்து, சௌதாலா ஏற்கனவே 9 ஆண்டுகள், 9 மாதங்கள் சிறைத் தண்டனையை கழித்துவிட்டதால், அவருக்கு இந்த விதி செல்லும் என்பதால், அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியர் நியமன மோசடி வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, கடந்த 2013-ஆம் ஆண்டு சௌதாலா சிறையில் அடைக்கப்பட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.