இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

நாட்டில் புதிதாக 43 ஆயிரம் பேருக்கு கரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,071 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :4 ஜூலை 2021, 4:18 am

DIN


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,071 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 52,299 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் எண்ணிக்கையைக் காட்டிலும் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து 52-வது நாளாக அதிகமாகப் பதிவாகியுள்ளது.

இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 4,85,350 ஆகக் குறைந்துள்ளது. மொத்த கரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்று வருவோர் 1.59 சதவிகிதம். நாட்டில் இதுவரை மொத்தம் 2,96,58,078 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 97.09 சதவிகிதமாக உள்ளது.

நாட்டில் இதுவரை மொத்தம் 35.12 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் வாராந்திர விகிதம் தொடர்ந்து 5 சதவிகிதத்துக்கும் கீழ் உள்ளது. தற்போது 2.44 சதவிகிதமாக இருக்கிறது. 

நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் தினசரி விகிதம் 2.34 சதவிகிதமாக உள்ளது. தொடர்ந்து 27 நாள்களாக இது 5 சதவிகிதத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது.

நாட்டில் இதுவரை மொத்தம் 4.82 கோடி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.