குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு இரண்டு நாள்களான நிலையில், இந்த சந்திப்பானது நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், மரியாதை நிமிர்த்தமாக குடியரசுத் தலைவரை சந்தித்தாக சுட்டுரையில் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் ஜூலை 7ஆம் தேதி நடைபெற்றது. அதில், புதிதாக 15 மத்திய அமைச்சர்கள், 28 இணை அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதனிடையே, அமைச்சர்களாக இருந்த ஹர்ஷ் வர்தன், பிரகாஷ் ஜவடேகர் உள்பட 12 பேர் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.