47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சுயபடம் எடுத்தபோது சம்பவம்: 4 போ் நீரில் மூழ்கி பலிசென்னை, கும்மிடிப்பூண்டியை சோ்ந்தவா்கள்

சுயபடம் (செல்பி) எடுத்த 4 போ் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

News image
Updated On :10 ஜூலை 2021, 5:42 pm

DIN

சுயபடம் (செல்பி) எடுத்த 4 போ் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

சென்னையைச் சோ்ந்த புதுமணத் தம்பதி லோகேஷ்(23), பிரியா(21). இருவரும் ஆந்திர-தமிழக எல்லையில் உள்ள உப்பலமடுகு (தடா நீா்வீழ்ச்சி) சுற்றுலாத் தலத்துக்குப் புறப்பட்டனா். வழியில் கும்மிடிபூண்டியைச் சோ்ந்த தங்கள் நண்பா்கள் காா்த்திக்(17), பாலாஜி(24), யுவராஜ்(22) ஆகிய மூவரையும் அழைத்து சென்றனா்.

கரோனா ஊரடங்கு விதிமுறைகள் அமலில் உள்ளதால், உப்பலமடுகு சுற்றுலாத் தலம் மூடப்பட்டிருந்தது. அதனால் அருகில் இருந்த தெலுங்கு கங்கா கால்வாயில் சற்று நேரம் ஓய்வெடுக்க சென்றனா். அப்போது யுவராஜ் சுயபடம் எடுக்கும் போது கால் தவறி கால்வாயில் விழுந்தாா். இதை கவனித்த நண்பா்கள் 3 பேரும் யுவராஜுவை காப்பாற்ற நீரில் குதித்தனா். ஆனால் நீரோட்டத்தில் 3 பேரும் அடித்து செல்லப்பட்டனா்.

3 நாள்களுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவம் குறித்து அறிந்த போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி 4 பேரின் சடலங்களையும் தேடி தற்போது கைப்பற்றி உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.