நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ல் தொடக்கம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 19 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். 
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா(கோப்புப்படம்)
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 19 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது: 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 19 ஆம் தேதி தொடங்கி மொத்தம் 19 நாள்கள் நடைபெற இருக்கிறது. அதன்படி ஆகஸ்ட் 13 ஆம் தேதியுடன் நிறைவடையும். 

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஊடகத்தினரும் கரோனா விதிகளின்படி அனுமதிக்கப்படுவர். கரோனா பரிசோதனை கட்டாயமில்லை. ஆனால் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தப்படும். 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com