ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ல் தொடக்கம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 19 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். 

News image
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா(கோப்புப்படம்)
Updated On :12 ஜூலை 2021, 8:42 am

DIN

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 19 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது: 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 19 ஆம் தேதி தொடங்கி மொத்தம் 19 நாள்கள் நடைபெற இருக்கிறது. அதன்படி ஆகஸ்ட் 13 ஆம் தேதியுடன் நிறைவடையும். 

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஊடகத்தினரும் கரோனா விதிகளின்படி அனுமதிக்கப்படுவர். கரோனா பரிசோதனை கட்டாயமில்லை. ஆனால் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தப்படும். 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.