புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

7 மாதத்தில் 78 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - காஷ்மீர் ஐஜி தகவல்

2021ஆம் ஆண்டில் இதுவரை காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 78 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:25 am

DIN

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினா் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனா். கடந்த சில மாதங்களாகவே துப்பாக்குச்சூடு சம்பவங்கள் குறைந்துள்ளதாக அரசு தரப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், 2021ஆம் ஆண்டில் இதுவரை காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 78 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக காஷ்மீர் காவல்துறை தலைவர் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.  இதுவரை 78 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

நடைபெற்ற துப்பாக்குச்சூடு சம்பவங்களில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் (39) லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவர். ஹிஸ்புல் முஜாஹிதின், ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த பயங்கரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்" என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.