மும்பையில் உள்ள விக்ரோலி பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள விக்ரோலி பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
முன்னதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மும்பையில் உள்ள செம்பூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 16 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். ஒரே நாளில் இருவேறு சம்பவங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது மும்பை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக பெரும்பாலான இடங்களில் நீர் சூழ்ந்து காட்சியளிக்கிறது. ஹனுமன் நகர் பகுதிகளில் வீடுகளில் மழை நீர் புகுந்து, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று மும்பைக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் தோ்வு: 11 மையங்களில் 4,741 போ் பங்கேற்பு

வாக்கு எண்ணிக்கை: நாமக்கல்லில் 106 நுண்பாா்வையாளா்களுக்கு பயிற்சி

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி ரூ. 48.28 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


