அனைத்துக்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மீண்டும் நாளை ஆலோசனை

நாடாளுமன்ற அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூலை 20) ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்துக்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மீண்டும் நாளை ஆலோசனை
Updated on
1 min read


நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூலை 20) ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் கரோனா பரவல் குறித்தும், தடுப்பூசி விநியோகம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று (ஜூலை 19) தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

இதற்கு முன்னதாக நேற்று பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில், நாடாளுமன்ற அவையை சுமூகமாக நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. எனினும் தொடர் அமளி காரணமாக இன்று நடைபெற்ற மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரண்டும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com