மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மும்பையில் லிப்ட் அறுந்து விழுந்ததில் 4 பேர் பலி

மும்பையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் லிப்ட் அறுந்து விழுந்ததில் 4 பேர் பலியானார்கள்.  

News image
Updated On :24 ஜூலை 2021, 4:00 pm

DIN

மும்பையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் லிப்ட் அறுந்து விழுந்ததில் 4 பேர் பலியானார்கள். 
மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் வொர்லி நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் லிப்ட் இன்று திடீரென அறுந்து விழுந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த 4 பேர் பலியானார்கள். ஒருவர் காயமடைந்தனார். 
உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பாரம் தாங்காமல் லிப்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே அம்மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் ஆதித்யா தாக்கரே சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். 
முன்னதாக நேற்று மும்பை சிவாஜி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகினர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.