புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஜம்மு-காஷ்மீர்: குல்காம் என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 

News image
கோப்புப்படம்
Updated On :25 ஜூலை 2021, 7:26 am

DIN

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 

இதுகுறித்து காஷ்மீர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய் குமார் கூறியதாவது:

குல்காம் மாவட்டத்தில் மூன்று பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக நேற்று இரவு கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப்படையினா் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டை மேற்கொண்டனா்.

இந்த நடவடிக்கையின்போது, பயங்கரவாதிகள் சரணடைய மறுத்து பாதுகாப்பு படையினரை நோக்கி தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டனா். அப்போது கொடுக்கப்பட்ட பதிலடியில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி யார் என்பது குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.