5 ஆண்டுகளில் 355 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி: மத்திய அரசு

நாட்டில் 5 ஆண்டுகளில் 355 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகியுள்ளதாக மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
5 ஆண்டுகளில் 355 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி
5 ஆண்டுகளில் 355 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி
Updated on
1 min read

நாட்டில் 5 ஆண்டுகளில் 355 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகியுள்ளதாக மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழப்பு விவரங்கள் குறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் அறிக்கை தாக்கல் செய்தார்.

“மத்திய ஆயுதப் படைகள் மற்றும் அசாம் ரைப்பில் படையை சேர்ந்த 355 வீரர்கள் 2016 முதல் 2020 வரையிலான 5 ஆண்டுகளில் பலியாகியுள்ளனர். அதில், அதிகபட்சமாக 2019ஆம் ஆண்டில் 88 வீரர்கள் பலியாகியுள்ளனர்.

 அதிகபட்சமாக மத்திய ரிசர்வ் காவல் படையை சேர்ந்த 209 வீரர்களும், எல்லைப் பாதுகாப்புப் படையின் 78 வீரர்களும் பலியாகியுள்ளனர்”

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com