இந்தியா
மூன்று ஆண்டுகளில் 625 நக்சல்கள் கொலை: மத்திய அரசு
நாட்டில் 3 ஆண்டுகளில் 625 நக்சல்கள் மற்றும் இடதுசாரி தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
நாட்டில் 3 ஆண்டுகளில் 625 நக்சல்கள் மற்றும் இடதுசாரி தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட நக்சல்கள் குறித்த விவரங்கள் குறித்து அறிக்கையை மத்திய உள்துறை இணையமைச்சர் தாக்கல் செய்தார்.
“2018 முதல் 2020 வரையிலான மூன்று ஆண்டுகளில் 2,168 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 625 நக்சல்கள் மற்றும் இடதுசாரி தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக சத்தீஸ்கரில் 341 நக்சல்களும், ஜார்கண்டில் 136 நக்சல்களும், மகாராஷ்டிரத்தில் 54 நக்சல்களும் கொல்லப்பட்டுள்ளனர்.