எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கரோனா பாதிப்பு: கேரளத்திற்கு நாளை(ஜூலை 30) செல்கிறது மத்திய உயர்நிலைக் குழு

கேரளத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை மத்திய உயர்நிலைக் குழு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள செல்கிறது.

News image
கேரளத்திற்கு நாளை(ஜூலை 30) செல்கிறது மத்திய உயர்நிலைக் குழு
Updated On :29 ஜூலை 2021, 6:40 am

DIN

கேரளத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய உயர்நிலைக் குழு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வெள்ளிக்கிழமை செல்கிறது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ள சூழலில், கேரள மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. நாட்டில் பதிவாகும் மொத்த பாதிப்பில் 50 சதவீதம் கேரளத்திலிருந்து பதிவாகிறது.

இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில்,

“கேரளத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து செயல்பட மத்திய சுகாதாரத்துறையின் உயர்நிலைக் குழு கேரளத்திற்கு அனுப்படவுள்ளது.

தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் எஸ்.கே.சிங் தலைமையில் 6 பேர் கொண்ட மத்தியக் குழு ஜூலை 30ஆம் தேதி கேரளத்திற்கு செல்லவுள்ளது. மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து மாநில களநிலவரத்தை ஆய்வு செய்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்தியக் குழு மேற்கொள்ளவுள்ளனர்.

கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1.54 லட்சமாக உள்ளது. மேலும், 6 மாவட்டங்களின் பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் மேல் உள்ளது.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.