‘அவையின் பொறுமையை சோதிக்காதீர்’: வெங்கையா நாயுடு எச்சரிக்கை
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்வதால் 9வது நாளாக அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்வதால் 9வது நாளாக அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பெகாஸஸ் விவகாரத்தை அவைகளில் விவாதிக்க வேண்டுமென கடந்த 8 நாள்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன் எதிர்க்கட்சிகள் அமளியை தொடர்ந்ததால், அவையின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவைத் தலைவர் வெங்கையா நாயுடு எச்சரித்தார்.
மேலும், அவையில் பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபடுவது, சத்தம் போடுவது போன்ற புகார்கள் வந்துள்ளது. இவை தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த அவைத் தலைவர், பிற்பகல் 12 மணிவரை அவையை ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...