'கரோனா விகிதம் 5% ஆகக் குறையும் வரை கர்நாடகத்தில் தளர்வு வேண்டாம்'
கர்நாடகத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 5% ஆக எட்டும்வரை தளர்வுகள் அறிவிக்கப்பட வேண்டாம் என்று கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழு மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.


பெங்களூரு: கர்நாடகத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 5% ஆக எட்டும்வரை தளர்வுகள் அறிவிக்கப்பட வேண்டாம் என்று கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழு மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஜூன் 7-ஆம் தேதிக்குப் பிறகும், மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடரப்பட வேண்டும் என்றும், மாநிலத்தில் ஒரு நாள் கரோனா பாதப்பு 5 ஆயிரத்துக்கும் குறைவாகவும், கரோனா உறுதியாகும் விகிதம் 5 சதவீதத்துக்கும் குறைவாகவும் மாறும்வரை மாநிலத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
இந்தக் குழுவினர், ஞாயிறன்று கூடி ஆலோசனை நடத்தி, தங்களது பரிந்துரைகளை திங்களன்று அளித்தனர். இது குறித்து முதல்வர் முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசன நடத்தி முடிவுகளை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...