மகாராஷ்டிரத்தில் பதிவான குற்ற வழக்குகளின் விவரம் கேட்கிறது உயர் நீதிமன்றம்
கரோனா பெருந்தொற்று தீவிரமடைந்த நிலையில், மாநிலத்தில் பதிவான முதல் தகவல் அறிக்கைகளின் எண்ணிக்கை மற்றும் கைது நடவடிக்கைகள் பற்றி மும்பை உயர் நீதிமன்றம் அறிக்கை கேட்டுள்ளது.


மும்பை: கரோனா பெருந்தொற்று தீவிரமடைந்த நிலையில், மாநிலத்தில் பதிவான முதல் தகவல் அறிக்கைகளின் எண்ணிக்கை மற்றும் கைது நடவடிக்கைகள் பற்றி மும்பை உயர் நீதிமன்றம் அறிக்கை கேட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்று காலத்தில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை எவ்வாறு இருந்தது என்பது குறித்து அறிக்கை அளிக்கவும் மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரோனா பெருந்தொற்றின்போது, சிறைகளில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், சிறைக் கைதிகள் பரோலில் விடுவிக்கப்பட்டாலும், புதிய கைது நடவடிக்கைகளால், சிறைகளில் நெரிசல் குறையவில்லை என்று மாநில அரசின் வழக்குரைஞர் மும்பை உயர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.
இந்த தகவலை அடுத்து, பெருந்தொற்று காலத்தில் பதிவான குற்ற வழக்குகளின் விவரத்தை நீதிமன்றம் கோரியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...