தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி: பாட்னாவில் சோதனை

பிகார் மாநிலம் பாட்னாவில் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக பரிசோதனை தொடங்கியுள்ளது.

News image
குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி: பாட்னாவில் சோதனை தொடக்கம்
Updated On :3 ஜூன் 2021, 5:29 am

DIN


பிகார் மாநிலம் பாட்னாவில் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக பரிசோதனை தொடங்கியுள்ளது.

பாட்னாவின் எய்ம்ஸ் மருத்துவமனையில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் தடுப்பூசி மூலம் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

குழந்தைகளுக்கு தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்வதற்காக கோவேக்ஸின் தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் மே 11-ம் தேதி அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக பேசிய நீதி ஆயோக் மருத்துவக் குழு உறுப்பினர் வி.கே.பால், 2 முதல் 18 வயதுடையோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பான இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு கோவேக்ஸின் தடுப்பூசியைப் பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியளித்துள்ளதாகக் கூறினார். 

கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. முதலில் மருத்துவப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 2-ம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து மே 1-ம் தேதி முதல் 18 முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இவர்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்ட் மற்றும் ரஷியாவின் ஸ்புட்னிக் -வி ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.