கரோனா பாதித்த குழந்தைகளைப் பராமரிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறை: மத்திய அரசு வெளியீடு
கரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


புது தில்லி: கரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மாநில அரசுகள், மாவட்ட நீதிமன்றங்கள், காவல்துறை, பஞ்சாயத்து அமைப்புகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிலையான பொறுப்புகளையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகச் செயலாளர் ராம் மோகன் மிஷ்ரா அனுப்பியிருக்கும் அறிவுறுத்தல் கடிதத்தில், கரோனா பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான வசதிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும், கரோனா பெருந்தொற்று காலத்தில், தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் முன்களத்தில் இருப்போர், அவற்றை உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...