இந்தியாவில் பைசர் தடுப்பூசி விரைவில் கிடைக்கும்: எய்ம்ஸ் இயக்குநர் தகவல்
இந்தியாவில் பைசர் தடுப்பூசி விரைவில் வரவுள்ளது என்றும் குழந்தைகளுக்கும் பைசர் தடுப்பூசி கிடைக்கும் என்றும் எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் கலிரியா தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் பைசர் தடுப்பூசி விரைவில் வரவுள்ளது என்றும் குழந்தைகளுக்கும் பைசர் தடுப்பூசி கிடைக்கும் என்றும் எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் கலிரியா தெரிவித்துள்ளார்.
நாட்டில் சொந்தத் தயாரிப்பான கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளும் தொடக்கம் முதலே பயன்பாட்டில் இருந்து வருகின்றன. தொடர்ந்து ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி வந்துள்ளது.
இதையடுத்து தடுப்பூசிகள் குறித்து பேசிய எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் கலிரியா, வெளிநாட்டைச் சேர்ந்த பல தடுப்பூசிகள் இந்தியாவுக்கு வரவுள்ளன. அதில் குறிப்பாக பைசர் மற்றும் மாடர்னா ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் பெறப்பட உள்ளது.
இவ்விரண்டு தடுப்பூசிகளும் பெரியவர்களுக்கு மட்டுமன்றி குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் இருக்கும். இதனால் மூன்றாவது அலையை நாம் எதிர்கொள்ள முடியும் என்று கூறியிருக்கிறார்.
மேலும் பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் ஜூலை - அக்டோபர் காலகட்டத்தில் 5 லட்சம் டோஸ்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக நாட்டில்பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியும் என்றும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...